லெபனானில் கையடக்க கருவியான பேஜர்கள் வெடித்ததில் லெபனான் எம்.பி மகன் உட்பட ஒன்பது பேர் பலியாயினர். 2,700க்கும் மேற்பட்டோர் காயம்அடைந்தனர். சம்பவத்திற்கு இஸ்ரேல் தான் காரணம் என ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் குற்றம் சாட்டி உள்ளனர்.
லெபனான் நாட்டில் இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் தகவல் தொடர்புக்காக கையடக்க கருவியாக பேஜர்களை பயன்படுத்தி வருகின்றனர்.
தெற்கு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அல்-ஷஹ்ரா மருத்துவமனையில் பலர் வைத்திருந்த கையடக்க பேஜர்கள் வெடித்தது, இதை தொடர்ந்து பேஜர்களை பயன்படுத்தும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் வைத்திருந்த பேஜர்களும் தொடர்ச்சியாக வெடித்தன. இதில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மற்றும் மருத்துவர்கள் என 2,500 பேர் காயமடைந்ததாகவும் ஒன்பது பேர் பலியாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பேஜர்கள் வைத்திருப்பவர்கள் உடனடியாக வெளியே வீசி எறிய வேண்டும். எனவும் அதனை பயன்படுத்த வேண்டாம் என வும் அறிவித்து நாடு முழுவதும் அவசர நிலையை லெபனான் நாடு அறிவித்து உள்ளது.
இந்த வெடிவிபத்தில் ஈரான் தூதர் முஜூதாபாஅமானி என்பவர் காயமடைந்ததாகவும் லெபனான் எம்.பி.,மகன் பலியாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.