ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரன் பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். ராஞ்சியில் நடந்த விழாவில் ஜேஎம்எம் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியமாக்கினார்.
ஜார்க்கண்ட் முதலமைச்சரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவருமான ஹேமந்த் சோரன் கடந்த பிப்ரவரி மாதம் நிலமோசடி வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றார். அப்போது அக்கட்சியின் மூத்த தலைவரான சம்பாய் சோரன் முதலமைச்சராகப் பதவியேற்றார். சுமார் 5 மாதங்கள் அவர் முதலமைச்சராக பதவி வகித்த நிலையில், ஹேமந்த் சோரன் ஜாமினில் விடுவிக்கப்பட்டதை அடுத்து சம்பாய் சோரன் பதவி விலகினார். இந்நிலையில், முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் நடந்த சில விஷயங்கள் தன்னை காயப்படுத்தியதாக சம்பாய் சோரன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். தன்னை அவதிமதிக்கும் வகையில் நடந்துகொண்டனர் என்றும் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார்.