வயநாடு நிலச்சரிவு எதிரொலி.. “இந்த 8 மாவட்டங்களை உடனே கண்காணியுங்கள்..” தமிழக அரசு உத்தரவு

சென்னை: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையே தமிழகத்தில் மலைக் கிராமங்கள் இருக்கும் மாவட்டங்களைக் கண்காணிக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மழை நேரத்தில் தீவிர கண்காணிப்பில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த ஜூலை 30ம் தேதி அதிகாலையில் மிக மோசமான நிலச்சரிவு ஏற்பட்டது. வயநாட்டில் ஏற்பட்ட இந்த மிக மோசமான நிலச்சரிவில் பல கிராமங்கள் மண்ணில் புதைந்தன.

இதுவரை இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 300க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

தமிழக அரசு உத்தரவு: இதற்கிடையே வயநாடு பேரிடர் எதிரொலியாகத் தமிழகத்தில் மலைக் கிராம மாவட்டங்களைக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழை நாட்களில் நிலைமையைக் கண்காணித்து உடனுக்கு உடன் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள 8 மாவட்டங்களைக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், மழைக் காலங்களில் வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மைத் துறை கண்காணிப்பில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே வயநாடு நிலச்சரிவு எதிரொலியாகத் தமிழகத்தில் மலைக் கிராமங்களில் இருக்கும் மாவட்டங்கள் கண்காணிக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மழை நாட்களில் எங்கே வெள்ளம் ஏற்படுகிறது என்பதைக் கண்காணிக்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

2 Replies to “வயநாடு நிலச்சரிவு எதிரொலி.. “இந்த 8 மாவட்டங்களை உடனே கண்காணியுங்கள்..” தமிழக அரசு உத்தரவு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *