ஆடி 18க்கு இந்த பாயசம் செஞ்சு அசத்துங்க..! இதோ ரெசிபி..!

பாயசம் என்பது விருந்துகளிலும் திருநாள்களிலும் பரிமாறும் இனிப்பு உணவு ஆகும். தமிழர் விருந்துகளில் பால் பாயசம் முக்கியமான உணவாகும். அதிலும் திருமணத்தில் பாயாசம் இல்லாமல் இருக்காது.. பேச்சு வழக்கில் பாயசத்தை பாயாசம் என்று சொல்ல ஆரம்பித்த்விட்டனர்.. இதில் பால் பாயசம், பருப்புப் பாயசம், அவல் பாயசம் எனப் பல வகைகள் உண்டு.

பால் பாயசத்தைப் பால், சவ்வரிசி, சேமியா முதலியவற்றைக் கொண்டு செய்கிறார்கள். பொதுவாக இதனுடன் உளுந்து வடையையோ பொடித்த அப்பளத்தையோ சேர்த்து உண்பார்கள். விருந்துகளில் நிறைப்புணவாகப் (Dessert) பரிமாறுவதற்கும், சீக்கிரமாக நாம் சாப்பிட்ட உணவுகள் செரிமானமடையும் மென்றுவிழுங்குவதில் சிரமமுள்ளவர்களுக்கும் நல்ல உணவாக பாயசம் பயன்படுகிறது.

அத்தகைய பாயசத்தை தமிழர்கள் கண்டிப்பாக ஆடி 18ஆம் பெருக்கு விழாவிற்கு செய்வார்கள்.. தற்போது பொரும்பாலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிகரித்துவிட்டனர்.. அதனால் அவர்களுக்காகவும் ஏற்ற ஒரு பாயசத்தைதான் நாளை ஆடிப்பெருக்கில் செய்ய போகிறோம்.. அது சாமை பாயசம்தான்..

சாமை அரிசியின் நன்மைகள்
காய்ச்சலினால் ஏற்படும் நாவறட்சியை போக்கும். வயிறு தொடர்பான நோய்களை கட்டுப்படுத்தும். ஆண்களின் இனப்பெருக்க அணு உற்பத்திக்கும், ஆண்மைக் குறைவை நீக்கும். சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் கொண்டு வர முதன்மை பங்கு வகிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *