சூப்பர் ஸ்டார் படம் என்பதால் வேட்டையனில் நடிக்கவில்லை – என்னங்க மஞ்சு வாரியர் இப்படி சொல்லிட்டாங்க
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் என்றால அது வேட்டையன் படம் தான். அந்த படத்தினை ஜெய் பீம் படத்தினை இயக்கிய ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நடந்து முடிந்தது. படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முற்றிலுமாக முடிந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதற்கிடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தின் டப்பிங்கிற்கு வராமல் காலம் தாழ்த்துவதாக கிசுகிசுக்கள் எழுந்தது. குறிப்பாக, லால் சலாம் படத்தின் மூலம் லைகா நிறுவனத்திற்கு ஏற்பட்ட நஷ்டத்தை, வேட்டையன் படத்தின் சம்பளத்தில் ஈடு செய்யவேண்டும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திடம் பேசியதாக கூறப்படுகின்றது. ஆனால் இதற்கு சூப்பர் ஸ்டார் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை என கூறப்படுகின்றது. இந்த பஞ்சாயத்தினால் படத்தின் டப்பிங்கிற்கு சூப்பர் ஸ்டார் வரவில்லை என கிசுகிசுக்கள் கிளம்பியது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்து, ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமானது. குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறி வெச்ச இறை விழனும் என பேசும் வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. ஆனால் அதன் பின்னர் படம் குறித்து மிகப்பெரிய அப்டேட்டுகள் எதுவும் வரவில்லை. மாறாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் கூலி படத்தின் அப்டேட்டுகள்தான் வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக நடித்துள்ள மஞ்சு வாரியர் கேரளாவில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது படம் குறித்து பேசினார். இது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆனாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ரசிகர்களில் ஒரு தரப்பினை கொஞ்சம் அதிருப்தி அடையச் செய்துள்ளது.