மக்களவைத் தேர்தலில் ஜம்மு-காஷ்மீரில் சுமார் 58% வாக்குகள் பதிவாகின. இது ஒரு சாதனை.எந்த ஒரு அரசியல் கட்சியும் இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கவில்லை.
10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் தற்போது சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 10 ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீரில் அமைதி மற்றும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த 10 ஆண்டுகளில் அங்கு உச்சகட்ட தீவிரவாதத்திலிருந்து, உச்சகட்டச் சுற்றுலாவுக்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த 10 ஆண்டுகள் அங்கு மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கு வழி வகுத்துள்ளது,” என்று கூறினார்.
சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, அங்கு கடந்த மூன்று ஆண்டுகளில் சுற்றுலாத் துறையில் சராசரியாக 15% வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது.2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஜம்மு-காஷ்மீருக்கு 6 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்ததாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
வன்முறை குறைந்துள்ளது என்பது உண்மைதான். ஆனால் தீவிரவாதத்தால் பாதிக்கப்படாத உதம்பூர், கதுவா, மற்றும் தோடா போன்ற பகுதிகளில், இதுபோன்ற பிரச்னைகள் அதிகரித்துள்ளன. நிலைமை மேம்பட்டுவிட்டது என்று கூறுபவர்கள், தங்கள் கூற்றைத் தாமே நம்பினால், அவர்களே இங்கிருந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் போட்டியிடவில்லை